Friday, December 5, 2025 8:26 am
இலங்கைத்தீவில் சீரற்ற காலநிலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்வது வேடிக்கை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும், சீரற்ற காலநிலைத் தாக்கத்தின்போது இதே நிலைதான் நடந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு மழையும் வெள்ளமும் அதிகமாக இருந்ததாகவும், அதனால் அழிவுகள் கடுமையாக இருந்ததாகவும் பொன்சேகா தெரிவித்தார்.
இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் எவராலும் அற்புதங்களைச் செய்ய முடியாது.
கிடைக்கும் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தைக் கொண்டு அரசாங்கம் அதிகபட்சமாகச் செய்ய வேண்டும். யாராவது அதிகமாகச் செய்ய விரும்பினால், அது இங்கே சாத்தியமில்லை. ஏனெனில் இலங்கை ஒரு ஏழை நாடு என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

