இலங்கையின் காட்டு யானை பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்குமாறு ரிட்டனின் இளவரசர் வில்லியஸிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச செவ்வாயன்று முறைப்படி வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பில் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து, வேல்ஸ் இளவரசருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தை சஜித் வழங்கினார்.
அந்தக் கடிதத்தில், மனித -யானை மோதல் ஆண்டுதோறும் 400இற்கும் மேற்பட்ட யானைகளையும் 150 மனித உயிர்களையும் பலி வாங்குவதாகக் குறிப்பிட்ட சஜித் பிறேமதாச, அறிவியல் அடிப்படையிலான தேசிய பாதுகாப்பு உத்தியின் அவசரத் தேவையை வலியுறுத்தினார். நீண்டகால கட்டமைப்பின் கீழ் நிபுணர்கள், சமூகங்கள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களை ஒன்றிணைத்து, தேசிய யானைகள் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு முயற்சியை (NECCI) உருவாக்க அவர் முன்மொழிந்தார்.
உயர் ஸ்தானிகர் பேட்ரிக் இந்த முயற்சியை வரவேற்று, இலங்கையின் யானைகளை “உலகளாவிய புதையல்” என்று வர்ணித்து, பல்லுயிர் பாதுகாப்புக்கான இங்கிலாந்தின் ஆதரவைக் குறிப்பிட்டார். “இந்த முயற்சி சரியான நேரத்தில் மற்றும் அவசியமானது, மேலும் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வுக்கான நீடித்த தீர்வுகளைக் கண்டறியும் உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன்” என்று அவர் கூறினார்.
இந்தக் கடிதம் கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தால் இலண்டனில் உள்ள இளவரசர் வில்லியமின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.