Tuesday, June 23, 2026 2:12 pm
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் 31 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த அகழ்வின் போது 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 390 என்புத்தொகுதிகள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
நேற்று 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 03 என்புகள் ஒரே நேரில் புதைக்கப்பட்டவாறு காணப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.

