ஈரானுடனான மோதலில், இஸ்ரேல் சமீபத்திய உயர் துல்லிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) மூன்று உயர் தளபதிகளைக் கொன்றது.
ஹிஸ்புல்லா, ஹமாஸ் , ஹவுத்திகள் போன்றவைக்கு ஆயுத விநியோகத்தை மேற்பார்வையிடும் முக்கிய குட்ஸ் படை அதிகாரி பெஹ்னம் ஷஹ்ரியாரி, மேற்கு ஈரானில் வாகனம் ஓட்டும்போது கொல்லப்பட்டார்.
இஸ்ரேலிய உளவுத்துறை அவரை ஈரானின் ஆயுதக் கடத்தல் நெட்வொர்க்கின் மையமாகவும், துருக்கி,லெபனானில் உள்ள ஷெல் நிறுவனங்கள் மற்றும் கடத்தல்காரர்கள் மூலம் மில்லியன் கணக்கானவர்களை பயங்கரவாத குழுக்களுக்கு அனுப்பும் இரகசிய நிதி சேனல்களின் மையமாகவும் அடையாளம் கண்டுள்ளது.
குட்ஸ் படையின் பாலஸ்தீனப் பிரிவின் தலைவர் சயீத் இசாதி, கோமில் இன்று காலை கொல்லப்பட்டார்.
அவர் ஹமாஸை ஆதரிப்பதிலும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடந்த படுகொலை உள்ளிட்ட தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நேரடியாக ஈடுபட்டார் என இஸ்ரேல் கண்டறிந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார்.
மூன்றாவது இலக்கான ஐஆர்ஜிசியின் இரண்டாவது ட்ரோன் பிரிவின் துணைத் தளபதி அமின் பௌர் ஜோடகி, ஒருங்கிணைந்த இஸ்ரேலிய நடவடிக்கைகளின் போதுகொல்லப்பட்டார்.
அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் அரவா பிராந்தியத்தில் ட்ரோன்களை இடைமறித்தன.
இதனால் பிராந்திய பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரானிய ஆதரவு பெற்ற போராளிகளிடமிருந்து பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.