உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணம் இன்று செவ்வாய்க்கிழமை [2] இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.
இரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை – பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தபட்ட விமான சேவையானது மீண்டும் டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தின் மூலம் இலங்கை விமான சேவைகள் அதிகார சபைக்கு விண்ணப்பிக்கபட்ட விண்ணப்பத்தினை பரிசீலிக்கும் முகமாக குறித்த தகுதி காண் சேவை இடம்பெற்றது.
வாராந்தம் மூன்று நாட்கள் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருவழி கட்டணமாக 68,000ரூபாய் அறவிடப்படும் . ஏழு கிலோ பயணிகள் பொதி அனுமதிக்கப்படும்.
11 பயணிகள் பயணம் செய்ய முடியும் . வெகு விரைவில் விமான சேவைகள் போக்குவரத்து அதிகார சபைக்கு கட்டுநாயக்க வரை சேவை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
