Saturday, August 15, 2026 6:25 pm
அமெரிக்க-ஈரான் மோதலின் மையமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான ADNOC-க்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை குற்றம் சாட்டியது. இது அந்த நீர்வழியில் நடந்த சமீபத்திய சம்பவமாகும்.
பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான அந்த நீர்வழிப்பாதையை தெஹ்ரான் திறம்பட முற்றுகையிட்டு, வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான ADNOC உடன் தொடர்புடைய ஒரு கப்பலைக் குறிவைத்து நடத்தப்பட்ட “பகைமையான ஈரானியத் தாக்குதல்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
ADNOC அமைப்புடன் தொடர்புடைய இரண்டு கப்பல்கள் ஜலசந்தி வழியாகச் சென்றபோது, ஈரான் அவற்றைத் தாக்கியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

