Sunday, August 16, 2026 4:28 pm
அங்குலானா கடற்பகுதியில் இலங்கை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் கப்பல் ஒன்று ஆபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் தொடர்கின்றன, மேலும் ஆபத்தில் சிக்கிய கப்பலை மீட்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
வழக்கமான ரோந்துப் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, கடந்த 15 ஆம் திகதி சுமார் 11:40 மணியளவில் அந்தக் கப்பல் ஆபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து 11 கடற்படை வீரர்கள் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படை ,உள்ளூர் மீனவ சமூகத்தினரின் ஆதரவுடன் கடற்படை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்கிறது. கடற்படை வீரர்களை மீட்பதற்கு உள்ளூர் சமூகம் முக்கியப் பங்காற்றியது.
பாதிக்கப்பட்ட கடற்படைக் கப்பலை மீட்கும் பணி இன்று மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கொந்தளிப்பான கடல் சூழல் இப்பணியைச் சவாலானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

