Saturday, August 15, 2026 6:31 pm
கிழக்கு இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர். அடிக்கடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நில அதிர்வு நிகழ்வுகள் நிறைந்த அப்பகுதியில், இது பரவலான பீதியை ஏற்படுத்தியதுடன், கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்தன.
6.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் உட்பட, பலநில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. சுனாமியைக் குறிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க கடல் மட்ட மாற்றங்கள் எதுவும் கண்காணிப்பில் இல்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசிய புவி இயற்பியல் நிறுவனமான BMKG, அந்நாட்டின் புளோரஸ் பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.58 மணிக்கு 9 மைல் (15 கி.மீ) ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் பதிவு செய்துள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டாவது நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

