Sunday, August 23, 2026 3:17 pm
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பெப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதில் கோபமடைந்த ஈரான் அமெரிக்காவுக்கு இராணுவ தளங்கள் அமைக்க இடம் கொடுத்த வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை நடத்தியது. ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கடல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை மூடிவிட்டது. இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அதோடு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை கணிசமாக உயர்ந்தது.
ஒருகட்டத்தில் அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் ஹார்மூச் நீரிணை பக்கம் வந்த சில கப்பல்களை ஈரான் தாக்கியதால் கோபமடைந்த அமெரிக்கா அமைதி போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்தது. ஹார்மூஸ் நீரிணை பகுதியில் அவ்வப்போது இரு நாடுகளும் ஒன்றை ஒன்று தாக்கி கொண்டன.
இந்நிலையில், ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்போம். அதோடு அந்த நாட்டுக்கு உதவும் அனைத்து நாடுகளின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஈரான் ‘ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் தரைவழி, வான் , கடல் வழிகளில் அந்த நாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்’ என எச்சரிக்கை செய்திருக்கிறது.

