Monday, August 24, 2026 6:02 pm
இலங்கைக்கான 29வது அமெரிக்கத் தூதராகப் பொறுப்பேற்பதற்காக, அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படவுள்ள எரிக் மேயர் கொழும்புக்கு வந்துள்ளார்.
அவரது வருகையைத் தொடர்ந்து, இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்வதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் தனது நோக்கத்தையும் தூதர் மேயர் வெளிப்படுத்தியதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
“இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு கௌரவம்,” என்று கூறிய மேயர், இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான வலுவான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க-இலங்கை கூட்டாண்மையை மேம்படுத்துதல், அமெரிக்க வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்கள் இருவருக்கும் அதிக செழிப்புக்கு பங்களித்தல் ஆகியவை தனது முன்னுரிமைகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.
இலங்கைக்கான நியமனத்திற்கு முன்னர், நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பொறுப்புத் தூதராக அவர் பணியாற்றினார்.
முன்னதாக, அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தில் சிரேஷ்ட பணியக அதிகாரியாகப் பணியாற்றினார்.

