Wednesday, June 3, 2026 3:43 pm
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை அடுத்து, அங்கிருந்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பல சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலைத் தொடர்ந்து குவைத், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அவசரக்கால திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளது.
பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விமான நிலையப் பணிகளை மீண்டும் வழமைக்குக் கொண்டு வரவும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் அப்துல்லா அல்-ரஜ்கி தெரிவித்துள்ளார்.

