Wednesday, June 3, 2026 3:35 pm
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாணவர்களின் கற்றலுக்கு நிதி ஆதாரத்தினை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிலினை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் அனைத்துபீடங்களையும் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான புலமைப்பரிசிலினை வழங்கிவைத்தார். மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபா மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும்வரை இத்தொகை வழங்கப்படவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக பதில் துணை வேந்தரும் கலைப்பீட பீடாபதியுமான நாகமுத்து பிரதீபராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.இந்நிய துணை தூதுவர் சிறீ சாய் முரளி, விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்
இதற்கு முன்னர் 2023–24 கல்வியாண்டில் இந்திய மானியத்தின் கீழ் ஒரு நிதி உதவித் திட்டம் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் கீழ், பொருளாதார நிலை மற்றும் கல்வித் திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு மாதந்தோறும் 5,000 இலங்கை ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

