Saturday, May 2, 2026 8:36 pm
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நய்யார் நசீரை டெம்பிள் ட்ரீஸில் சந்தித்த பிரதமர் ஹரினி அமரசூரிய,கலந்துரையாடினார். இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இரு தரப்பினரும், பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களில் வேரூன்றிய, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். அதே நேரத்தில், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.
இந்தக் கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கும், இராஜதந்திர ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

