Wednesday, April 22, 2026 2:05 am
இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை பாகிஸ்தான் அதிகாரிகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளனர் என, செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதிய விமானிகளுக்கான அறிவிப்பில் (NOTAM) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஓராண்டு நிறைவடைவதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து இந்தியப் பதிவு பெற்ற, குத்தகைக்கு எடுக்கப்பட்ட, வர்த்தக ,இராணுவ விமானங்கள் மே 24, 2026 அன்று காலை 5 மணி வரை பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், ஏப்ரல் 24, 2025 முதல் இந்திய விமானங்களுக்காகத் தனது வான்வெளியை மூடி வைத்துள்ளது.
பாகிஸ்தானின் முடிவைத் தொடர்ந்து, இந்தியாவும் ஏப்ரல் 30 அன்று பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குத் தனது வான்வெளியை மூடியது.

