Monday, December 22, 2025 12:02 pm
யாழ்ப்பாணம் – புத்தூரில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், எதிரே வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் புத்தூர் மணற்பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே தலையில் ஏற்பட்ட காயத்தினால் பலியாகியுள்ளார். ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், தாயும் மகனும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

