Friday, December 19, 2025 1:47 pm
சென்னையில் பிட்புல், ரொட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிட்புல், ரொட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இன்றி சட்டவிரோதமாக பிட்புல், ரொட்வீலர் நாய்களை வாங்கி வளர்ப்போருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற பிட்புல், ரொட்வீலர் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டி, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

