Tuesday, December 16, 2025 2:31 pm
இலங்கையில் எயிட்ஸ் பரவல் விகிதம் மற்ற நாடுகளை விடக் குறைவாக இருந்தாலும் , இளைஞர்கள் மத்தியில் இதன் பரவல் அதிகரித்து வருகிறது.
எச்.ஐ.வி தொற்று பரவலானது புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுமார் 639 எயிட்ஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதன்படி 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மாத்திரம் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் (NSACP) தகவல் வெளியிட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் எயிட்ஸ் தொடர்பான பாதிப்புகளால் சுமார் 30 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு ,கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6% அதிகரித்துள்ளது.
இதன்படி தொற்று பாதிப்பில் ஆண்களே முன்னிலையில் உள்ளதாகவும் , ஆண்-பெண் விகிதாசாரம் 6:1 ஆகவும் காணப்படுகின்றது.
தவறான புரிதல்கள் , பாதுகாப்பற்ற நடத்தைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவை எயிட்ஸ் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் இதன் பாதிப்பைக் குறைக்க முடியும் என சுகாதாரப் பிரிவு வலியுறுத்துகிறது.

