Thursday, November 13, 2025 10:06 am
வவுனியா மாவட்டத்தில் உள்ள புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில், நேற்று புதன்கிழமை மாலை தொடக்கம் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தற்போதைக்கு மீன்பிடியினை தவிர்க்குமாறும், பொதுமக்கள் இந்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் ஒரு நீர் ஆதாரமாக பேராறு நீர்த்தேக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


