Friday, July 17, 2026 12:09 pm
மத்திய அரசின் உரிய அனுமதியை பெறாமல் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதாக தமிழக அமைச்சர்கள் இருவருக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் , தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இணைந்து வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். விதிகளின்படி, அமைச்சர்கள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது மத்திய உள்துறை அமைச்சிடம் உரிய அனுமதியை பெற வேண்டும் என்பதும், தங்களுடைய டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மூலமாகவே பயணிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.
ஆனால், அமைச்சர்கள் ராஜ்மோகனும், கீர்த்தனாவும் மத்திய அரசிடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், தங்களின் தனிப்பட்ட சொந்த பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தது தற்பொழுது தெரியவந்துள்ளது.
விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்த விவகாரத்தை அடுத்து, இரு அமைச்சர்களிடமும் உரிய விளக்கம் கேட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சு தற்பொழுது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

