Thursday, August 20, 2026 7:58 pm
மூத்த இலங்கைப் பாடகி நந்தா மாலினி, தனது 82 ஆவது வயதில் நாவலாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23, ஆம் திகதி பிறந்த நந்தா மாலினி, ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் நீடித்த தனது இசைப் பயணத்தில், இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற, செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
சமூகப் பிரச்சினைகள், மனித உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை ஆராயும் பாடல்களுக்காக அறியப்பட்ட அவர், இலங்கை இசையில் ஒரு வரையறுக்கும் குரலாகத் திகழ்ந்தார். மேலும், சமூக அநீதி மற்றும் பிற பிரச்சினைகளைக் கையாள்வதற்காகத் தனது கலையைப் பயன்படுத்தியதற்காகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டார்.

