தனது சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) முடங்கியதன் பின்னணியில் “உக்ரைன் பகுதி”யிலிருந்து நடந்த “பாரிய சைபர் தாக்குதல்” தான் காரணம் என
X-இன் உரிமையாளரான எலான் மஸ்க், க்கூறினார்.
திங்கட்கிழமை உலகெங்கும் நாள் முழுவதும் X தளம் மீண்டும் மீண்டும் செயலிழந்தது. தொடர் மீட்டெடுப்பும், செயலிழப்புமாகவே இருந்தது.
“என்ன நடந்தது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் உக்ரைன் பகுதியில் இருந்து வரும் ஐபி முகவரிகளைக் கொண்ட, எக்ஸ் அமைப்பை செயலிழக்கச் செய்ய நோக்கத்தோடு ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது,” என்று ஃபாக்ஸ் நியூஸ் உரையாடலின் போது மஸ்க் கூறினார்.
ஒரு பொது டெலிகிராம் சேனலின்படி, பாலஸ்தீன ஆதரவு ஹேக்கர் குழுவான டார்க் ஸ்டோர்ம் டீம், X இல் நடந்த DDoS தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களை குறிவைப்பதில் இந்த குழு பெயர் பெற்றது.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி