இந்தோனேஷியாவில் புதிதாகக் கட்டப்பட்ட முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2 ஆம்திகதி வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜகார்த்தாவில், ‘ஶ்ரீசனாதன தர்ம ஆலயம்’ என்னும் பெயரில் முருகப்பெருமானுக்குக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவை ஜகார்த்தா ஆளுநர் தலைமையேற்று நடத்தினார். அந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினர்கள், இந்தியத் தூதர் மற்றும் பல்வேறு மத, கலாசார அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தில் முருகப்பெருமான், விநாயகர், கன்னிகா பரமேஸ்வரி, சிவன் – பார்வதி, மகாவிஷ்ணு – லட்சுமி, பக்த ஆஞ்சநேயர், நவகிரகங்கள், அகஸ்திய முனிவர், இடும்பன் ஆகிய தெய்வங்களுக்குத் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன.40 மீற்றர் உயரம் கொண்ட அழகிய கம்பீரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பர்ய அருங்காட்சியகம் ஒன்றும் அமைப்பட இருக்கிறது. இந்தியா-இந்தோனேசியா கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
Trending
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.