நெல்லியடியில் இயங்கிவந்த பச்சை குத்தும் கடை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சீல் வைத்து மூடப்பட்டது.
இந்த வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முன் அனுமதி இன்றி இக் கடையைத் திறத்தல், உள்நுழைதல், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகின்றேன்.
இவ் அறிவித்தலை மீறினால் 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரிவு 78,149 இற்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன் என கரவெட்டி பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதனால் கையொப்பம் இடப்பட்ட அறிவித்தல் கடையின் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.
சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தியமை , துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றமையினால் ர் ஒருவர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Trending
- எல்பிட்டியவில் எண்ணைக்கம்பத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
- காணி விடுவிப்பு கோரிக்கை – ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
- கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்பு
- வேலணை மக்களிடம் மாட்டிய திருடர் குழு
- சீனா மீது 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் – பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
- ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு வெள்ளைமாளிகை தடை
- 200 தெலுங்கு ஊழியர்களை வெளியேற்றிய அமெரிக்க நிறுவனம்