Friday, August 14, 2026 4:06 pm
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் குறிவைத்து நடத்தப்படும் “ஒன்றிணைந்த தேசம் – தேசிய இயக்கம்” என்ற பிரச்சாரத்தின் கீழ், பொலிஸார் நேற்று 740 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
ஒரு சந்தேக நபருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் எட்டு பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவுகள் கோரப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, நான்கு சந்தேக நபர்கள் புனர்வாழ்வுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர்.

