Thursday, July 23, 2026 3:54 pm
கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்நாளினை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நினைவு கூர்ந்தனர்.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தினால் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் நீங்காத வடுவாகவே நீடிப்பதாகவும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

