Friday, February 20, 2026 8:48 pm
நாடு முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு சோதனைகளில் கிட்டத்தட்ட 100,000 பேர் கைது செய்யப்பட்டனர்
“தேசிய ஐக்கிய – தேசிய இயக்கம்” பிரசாரத்தின் கீழ் இதுவரை 99,540 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவிக்கைன்றனர்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் 137 சந்தேக நபர்களுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ளன.1,973 நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவை பொலிஸார் பெற்றனர், 1,639 பேர் மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 524 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின், 1,416 கிலோ கிரிஸ்டல் மெத், 11.6 கிலோ கஞ்சா , கிட்டத்தட்ட 933,000 மாத்திரைகள் ஆகியன அடங்கும். இலங்கைமுழுவதும் 100,247 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

