Thursday, February 12, 2026 4:29 pm
கடவுச்சீட்டு வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்திய கணினி அமைப்பின் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தினை அணுகுவதற்கு முன்னர் 1962 என்ற துரித இலக்கத்துடன் அல்லது திணைக்களத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
கணினி அமைப்பு கோளாறு விரைவாக மீட்டெடுக்கப்படும் எனவும், அடுத்த திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு வழங்குவது மீண்டும் தொடங்கும் எனவும் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது. எனினும் கோளாறு சரி செய்யப்பட்டுள்ள நிலையில் திணைக்களத்தினால் கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

