Monday, February 2, 2026 3:14 pm
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வானியல் பார்வையாளர் இரவு வானத்தில் நான்கு நிலவுகள் ஒளிர்வது போல் தோன்றியதைக் கண்டு வியப்படைந்தனர்.
இது பாராசெலினே எனப்படும் அரிய மற்றும் பார்வைக்கு அதிர்ச்சியூட்டும் வளிமண்டல நிகழ்வாகும். இந்த காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவின.
அந்தக் காட்சியின் நமது பூமியின் இயற்கை துணைக் கோளைச் சுற்றி பல ஒளிரும் கோளங்கள் இருப்பதைக் காட்டியது.
இந்த அசாதாரண காட்சி சந்திரனின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஒரு மாயையை உருவாக்கியதுடன் பார்வையாளர்களை வியப்பிலும் ஆழ்த்தியது.
எனினும், இந்தக் காட்சி கூடுதல் நிலவுகளால் ஏற்படவில்லை, மாறாக பாராசெலீனே (Paraselenae) எனப்படும் வளிமண்டல ஒளியியல் விளைவால் ஏற்பட்டது.

