Sunday, February 1, 2026 9:15 am
பீஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. . கொழும்பில் அதிகாரப்பூர்வ விழாவுடன் வரவேற்கப்பட்டது, இதில் விமானப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் இராஜதந்திரத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த சேவை வாராந்திர இரண்டு விமானங்களை இயக்கும், இது சீனத் தலைநகருக்கும் இலங்கைக்கும் இடையே மேம்பட்ட,வசதியான அணுகலை வழங்கும். இந்த நேரடி இணைப்பு சுற்றுலா வளர்ச்சியை ஊகுவிப்பதிலும், , வணிக பயணத்தை எளிதாக்குவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை ஆழப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

