Wednesday, December 31, 2025 2:52 pm
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று 148 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரத்து செய்யப்பட்ட விமானங்களில் 70 புறப்படும் விமானங்களும் 78 வருகை தரும் விமானங்களும் அடங்குகின்றன. மேலதிகமாக இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
டெல்லி தேசிய நகர் பகுதியில் இன்று அதிகாலை அடர்த்தியான மூடுபனி மூடியிருந்தது.
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய திகதிகளில் காற்றின் தரம் ‘கடுமையான’ நிலைக்குச் சென்று, ஜனவரி 2 ஆம் திகதி ‘மிகவும் மோசமான’ நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என்று காற்றுத் தர கண்காணிப்பு எச்சரிக்கை அமைப்பு எச்சரித்தது.

