Tuesday, December 30, 2025 3:07 pm
காலி மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “திருடன் திருடன் எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்” எனக் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தமையினால் சபை சீர்குலைந்து காணப்பட்டது.
எனினும் மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று குழுநிலை அமர்வுகளை அறிவித்தார். இதனைத் தொடர்ந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலைமை மோசமடைந்ததையடுத்து , சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

