Friday, December 26, 2025 3:43 pm
நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (25) பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கமைய , பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 29,539 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேகத்தின் பேரில் 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் , 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு , கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 179 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 88 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை , மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 பேரும் , கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 36 பேரும் , பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,414 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

