Friday, December 26, 2025 1:02 pm
சுனாமியால் பெரேலிய பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் என்ஜின் இந்தமுறை பெரேலிய விபத்தை நினைவுகூரும் வகையில் அடையாளபூர்வமாகப் பயணிக்கவில்லை.
சுனாமியை நினைவுகூரும் வகையில் வேறு ஒரு என்ஜினைப் பயன்படுத்தி ‘சுனாமி ரயில்’ என அழைக்கப்படும் விபத்துக்குள்ளான ரயில், இன்று வெள்ளிக்கிழமை மாத்தறை வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
விபத்துக்குள்ளான என்ஜின் கடந்த பல வருடங்களாகத் தொடர்ச்சியாக இயக்கப்பட்ட நிலையில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இம்முறை அது இயக்கப்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

