Friday, December 12, 2025 1:15 pm
நாட்டில் இடம்பெற்ற அனர்த நிலைமையை கருத்தில் கொண்டும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டும் கர்ப்பிணித் தாய்மாருக்கு 5000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கொடுப்பனவு ஒருமுறை மட்டுமே வழங்கப்படவுள்ளதாகவும், 2025 நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய் சேவை நல நிலையங்களில் பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மாருக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலகங்கள் வழியாக இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

