Wednesday, December 10, 2025 12:12 pm
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நெடுந்தீவு மாவலி துறைமுகத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இந்தசம்பவத்தில் நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிரேமகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் “நெடுந்தாரகை” பயணிகள் படகில் ஏறுவதற்கு முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் விழுந்த நிலையில் வெளியே வராமல் இருந்துள்ளார்.
நெடுந்தீவு கடற்படை சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்ட போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

