Saturday, December 6, 2025 12:50 pm
கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது அதிகளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ 802 கிராம் ஹெரோயின் குறித்த படகில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.

