Tuesday, December 2, 2025 4:45 pm
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் ஆஜராகியிருந்தார்.
ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

