Tuesday, December 2, 2025 10:43 am
டித்வா புயலின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக உடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுகின்றது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போயுள்ளவர்களின் எண்ணிக்கை 352 ஆக பதிவாகியுள்ளது.
கண்டி 88, பதுளை 82, நுவரெலியா 75, குருணாகல் 52, மாத்தளை 24, கேகாலை 22 மரணங்கள் பதிவாகியுள்ளன.
3 இலட்சத்துக்கு 82 ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த 13 இலட்சத்துக்கு 73 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களால் 432 வீடுகள் முழுமையாகவும் 15ஆயிரத்து 688 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

