Friday, November 21, 2025 10:31 am
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A380 ரக விமானம் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
துபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EK-434 என்ற விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகவே விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டது.
விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன.
மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் விமானம் புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு பிரிஸ்பேனுக்கு அதன் பயணத்தை ஆரம்பித்தது.
குறித்த விமான தரையிறக்கத்தால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலை காணப்பட்டது.

