Saturday, November 15, 2025 4:04 pm
போதைப்பொருள், அதனை விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் யாழில் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
வல்வெட்டித்துறை பகுதி ஒன்றில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், காங்கேசன்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 கிலோ 51 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா, 20 கிராம் 620 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 04 தொலைபேசிகள், போதைப்பொருள் விற்றதன் மூலம் பெறப்பட்ட 15ஆயிரத்து 720 ரூபாய் பணம், போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

