Wednesday, November 5, 2025 3:39 pm
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பாெலிஸார் இன்று புதன்கிழமை (05.11.2025) காலை தேவிபுரம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரினால் கைப்பற்றப்பட்டது,
இதேவேளை கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சந்தேக நபர்களை பிடிப்பதற்காக புதுக்குடியிருப்பு பாெலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

