Wednesday, October 29, 2025 10:28 am
கொழும்பிலுள்ள நாரஹேன்பிட்டி, தபரே மாவத்தையில் இன்று புதன்கிழமை (29) அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

