Saturday, October 25, 2025 12:06 pm
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொலிசாரின் தீடீர் சோதனையின் போது, கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமிருந்தும் எழு கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. ஒரு சந்தேக நபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும், ஏனைய ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர், சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

