Thursday, October 23, 2025 11:44 am
நைஜீரியாவில் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு பெட்ரோல் கொண்டு சென்ற டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள சாலையில் டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறி ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 60 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.