Tuesday, October 21, 2025 7:36 am
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து அமைச்சுகளின் பொறுப்புக்கள், செயற்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் என்பன இந்த வர்தமானியில் திருத்தப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்களின்படி பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறையும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் இருந்த மறுவாழ்வுப் பணியகமும் நீக்கப்பட்டுள்ளன.