காஸா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான மோதலுக்குப் பிந்தைய காஸாவின் எதிர்காலம் குறித்த அமெரிக்காவின் இந்தத் திட்டம், முக்கியமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காஸாவில் இருந்து வெளியேற வேண்டும் ஹமாஸ் ஆயுதங்களை முற்றிலுமாகக் களைய வேண்டும் என்ற இரு முக்கிய நிபந்தனைகளை முன்வைக்கிறது.
இந்தத் திட்டத்தின்படி, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காஸாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து, முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும்
அதற்குப் பிரதிபலனாக, ஹமாஸ் உட்பட அனைத்து பாலஸ்தீனக் குழுக்களும் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, நிரந்தரமாக போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
இந்தச் சமாதான முயற்சியை மேற்பார்வையிடவும், அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் ஒரு சர்வதேசக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்றும் இத்திட்டம் கூறுகிறது.
இந்தத் திட்டம் காஸாவில் மனிதநேய உதவிகளை அதிகரிப்பது, புனரமைப்புப் பணிகளைத் தொடங்குவது மற்றும் பாலஸ்தீனியர்களுக்கான தன்னாட்சி அரசை அமைப்பதற்கான அரசியல் செயல்முறையை மீண்டும் தொடங்குவது போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
ஐநா சபை , பிற சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் காஸாசாவில் ஒரு புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், அதன் மூலம் இப்பகுதியில் நீண்ட கால அமைதிக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.