போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் , கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பற்றிய தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.யின் மொபைல் தொலைபேசி எண்ணை நேரடியாக அழைப்பதன் மூலம் பொதுமக்கள் இன்று முதல் த்ஜகவல்களை வழங்கலாம்.
வழங்கப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், மூத்த டி.ஐ.ஜி.க்கள் தேவையான சோதனைகள் , நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட மேலும் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பார்கள்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க குடிமக்களாக நீங்கள் வழங்கும் ஆதரவை இலங்கை பொலிஸ் பெரிதும் பாராட்டுகிறது, மேலும் சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.க்களின் பெயர்கள் , மொபைல் தொலைபேசி எண்கள் பின்வருமாறு.
மேல் மாகாணம் சஞ்சீவ தர்மரத்ன கையடக்கத் தொலைபேசி – 071-8591991
தென் மாகாணம் தகித்சிறி ஜெயலத் – 071-8591992
ஊவா மாகாணம் மகேஷ் சேனநாயக்க – 071-8592642.
சப்ரகமுவ மாகாணம் மஹிந்த குணரத்ன – 071-8592618
வடமேற்கு மாகாணம் அஜித் ரோஹண – 071-8592600
மத்திய மாகாணம் லலித் பத்திநாயக்க – 071-8591985
வடமத்திய மாகாணம் புத்திக சிறிவர்தன – 071-8592645
வடக்கு மாகாணம் டி.சி.ஏ. தனபால 071-8592644
கிழக்கு மாகாணம் .வருண ஜெயசுந்தர – 071-8592640