ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் இந்த போராட்டங்களுக்கு வழிவகுத்தன.
இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர் தலைவரான அல்டியா டிரினிடாட், “நாங்கள் வறுமையில் வாழும்போது, அவர்கள் எங்கள் வரிகளை ஆடம்பர கார்கள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.” என்றார்.
ஊழல் செய்த அதிகாரிகள், வணிகத் தலைவர்கள் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய மாகாணமான புலகானில், உறுதியளிக்கப்பட்ட பல திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை அல்லது மோசமான தரத்தில் இருந்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர்.இதன் காரணமாக, தொடர்ந்து ஏற்படும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஊழல் குறித்து ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஒப்புக்கொண்டார். வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 545 பில்லியன் பெசோக்களில் (சுமார் $9.5 பில்லியன்) ஊழல் நடந்துள்ளதாக அவர் கூறினார். இந்த ஊழல் குறித்து விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவையும் அவர் அமைத்துள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கைகளும் மக்களின் கோபத்தைக் குறைக்கவில்லை. அமைதியான வழியில் போராட கத்தோலிக்க திருச்சபை மக்களை வலியுறுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் மக்கள் ஊழலைத் தொடர்ந்து பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை இந்த போராட்டங்கள் உணர்த்துகின்றன.
சமீபத்தில் நேபாளத்தில் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது பிலிப்பைன்ஸும் ஆட்சி மாற்றத்தை நோக்கி செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பி