பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் (BIA) நேற்று (20) வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள குஷ், ஹஷிஷ் போதைப்பொருட்களை கைப்பற்றினர்.
கழிவறைக்குள் இருந்த சந்தேகத்திற்கிடமான பல பார்சல்களை துப்புரவுப் பணியாளர் ஒருவர் கவனித்து, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தபோது இவை கபிப்பற்றப்பட்டன.
சோதனையில், பார்சல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 422 கிராம் குஷ் கஞ்சா , 1.262 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.