முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று (23) சிறைச்சாலை மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துமிந்த திசாநாயக்க ,பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் நேற்று இரவு அவரைப் பார்க்க முயன்றனர், ஆனால் அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
